குறைந்த விலையில் தங்கம் தருவதாக ரூ. 25 ஆயிரம் அபேஸ் – 2 பேர் கைது..!

கோவை குனியமுத்தூர், விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் சுதாகர் ( வயது 42) கூல் டிரிங்ஸ் கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு துணி வியாபாரம் செய்து வரும் 2 பேர் சென்றனர்.இவர்கள் இருவரும் கர்நாடக மாநிலம் மைசூர் மடியாவை சேர்ந்தவர்கள்.இவர்கள் சுதாகரிடம்நெருங்கி பழகினார்கள். பின்னர் தங்கள் ஊரில் குறைந்த விலையில் தங்கம் கிடைப்பதாக கூறினார்கள்.அதை சுதாகர் நம்பினார்.தங்கம் தருவதாக ஒப்பணக்கார வீதியில் உள்ள நரசிம்மர் கோவில் அருகே வருமாறு கூறினார்கள். சுதாகர் ரூ. 25 ஆயிரத்துடன் அங்கு சென்றார். அவர்களிடம் அந்த பணத்தை கொடுத்தார். பணத்தை வாங்கிக் கொண்டு தங்கம் கொடுக்காமல் 2 பேரும் நழுவ முயன்றனர் .அவர்களை சுதாகர் கையும் களமாக பிடித்து உக்கடம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார் .போலீசார் அவர்களை கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் மைசூரைச் சேர்ந்த குடியர(வயது 35) பீம் (வயது 42) என்பது தெரியவந்தது. பணம் பறிமுதல் செய்யப்பட்டது..