தாய்,மகன் உட்பட 4 பேர் கொடூரமாக வெட்டி படுகொலை..3 பேர் வெறிச்செயல்.. ஒருவர் கைது – ஐ.ஜி., டி.ஐ ஜி இன்று நேரில் விசாரணை..!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கள்ளக்கிணறு குறைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம். இவரது மகன் செந்தில்குமார் ( வயது 47) பருத்திக்கொட்டை வியாபாரம் செய்து வந்தார் .இவரது சித்தப்பா பழனிச்சாமியின் மகன் மோகன் மோகன்ராஜ் (வயது 45 ) இவருடைய தாயார் புஷ்பவதி,|அக்காள் ரத்தினம்மாள். இவர்கள் கள்ளக்கிணறு பகுதியில் அருகருகே வசித்து வந்தனர் .நேற்றிரவு 7 மணிக்கு வீட்டில் செந்தில் குமார் தனியாக இருந்தார். அப்போது 3 பேர் கொண்ட ஒரு கும்பல் அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களுடன் வந்தது .அந்த கும்பல் செந்தில்குமாரை சரமாரியாக வெட்டியது. செந்தில் குமாரின் அலறல் சத்தம் கேட்டு மோகன்ராஜ் அங்கு ஒடி வந்து காப்பாற்ற முயன்றார். அதற்குள் அந்த கும்பல் செந்தில் குமாரையும் வெட்டி சாய்த்தது. கொலையை தடுக்க முயன்ற மோகன் ராஜையும் அந்த கும்பல் கொடூரமாக வெட்டிசாய்த்தது. மோகன் ராஜின்சத்தம் கேட்டு அவரது தாயார் புஷ்பவதி , அவரது அக்கா ரத்தினாம்பாள் ஓடி வந்தனர். அந்த கும்பல் அவர்கள் 2 பேரையும் சரமாரியாகவெட்டியது. இதனால் அவர்கள் 2 பேரும் அதே இடத்தில் உயிர் இழந்தனர். இவை அனைத்தும் கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்தது. கொலையில் ஈடுபட்ட கும்பல் வெறியுடன் கை, கால்களை துண்டு துண்டாக வெட்டி வீசியது. அந்த தெரு முழுவதும் உடல் பாகங்கள் சிதறி கிடந்தன. இது பற்றி தகவல் அறிந்ததம் திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுசாமிநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்களின் உடலை மீட்டுபிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கமுயன்றனர். அப்போது அந்த பகுதி மக்கள் திரண்டு வந்து கொலையாளிகளை உடனடியாக கைது செய்தால் தான் உடல்களை எடுக்க அனுமதிப்போம் என்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.போலீசார் அவர்களிடம் சமரச பேச்சு நடத்திபேச்சு நடத்தி கொள்ளையாளிகளை கைது செய்வோம் என்று உறுதி அளித்தனர்.பிறகு இறந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்கு எடுத்துச் செல்ல பொதுமக்கள் அனுமதித்தனர்.4 பேர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.இதுகுறித்து பல்லடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் செந்தில்குமார் பருத்திக்கொட்டை வியாபாரம் செய்து வந்ததால் சரக்குவேன் வைத்திருந்தார். அதன் டிரைவராக பணியாற்றி ஒருவரின் நடவடிக்கை சரியில்லாததால் அவரைசெந்தில்குமார் வேலையை விட்டு நிறுத்தினார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர் செந்தில்குமார் வீட்டிற்கு செல்லும் வழி பாதையில் அமர்ந்து மது குடிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். அவரிடம் செந்தில்குமார் வேறுபகுதி சென்று மது அருந்துமாறு கூறினார். இந்த நிலையில் அந்த டிரைவரும் அவரது நண்பர்கள் 2 பேரும் நேற்றிரவு செந்தில் குமார் வீட்டிற்கு செல்லும் வழி பாதையில் அமர்ந்து மது குடித்தனர். இதை பார்த்து செந்தில்குமார் அவர்களை எச்சரிக்கை செய்து அங்கிருந்து போகுமாறு கூறினார். ஆனால் அவர்கள் போகாமல் செந்தில்குமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆத்திரமடைந்து அவர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் செந்தில்குமார், மோகன்ராஜ், அவரது தாயார் புஷ்பவதி மற்றும் ரத்தினம்மாள் ஆகியோரை கொடூரமாககொலை செய்துவிட்டு 3 பேரும் தப்பிச் சென்று விட்டனர். கொலையாளிகளை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. எனவே கொலையாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த நிலையில் தேடப்பட்டு வந்த ஒருவர் இன்று காலையில் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்த சின்னசாமி மகள் செல்லமுத்து (வயது 24) என்பது தெரிய வந்தது. கோவை மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. பவானீஸ்வரி,கோவை சரக டி .ஐ. ஜி.சரவண சுந்தர் ஆகியோர் இன்று நேரில் சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்..