தமிழ்நாட்டில் புதிதாக 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

மிழகத்தில் இன்றைய பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- மலேசியாவில் இருந்து வந்த ஒருவர் உள்ளிட்ட 4 பேருக்கு இன்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 3 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது.

35 மாவட்டங்களில் பாதிப்பு இல்லை. தமிழகத்தில் தொற்றால் எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு ஏற்படவில்லை. மேற்கண்ட தகவல் மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வுத்துறையின், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்கம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.