கார், பைக்கில் போதைப்பொருள் கடத்தல் – 4 பேர் கைது.!!

கோவை குனியமுத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், சப் இன்ஸ்பெக்டர் ராஜா ஆகியோர் நேற்று குனியமுத்தூர் சுகுணாபுரம் மைக்கேல் சந்திப்பில் வாகன சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 10 கிராம் உயர் ரகபோதை பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக ஈச்சனாரி சீனிவாசா நகரை சேர்ந்த ஹரிகரன் ( 30 ) மனோஜ் குமார் ( 30) குறிச்சி ஹவுசிங் யூனிட்டைசேர்ந்த மிதுஷ் ( 23 ) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். போதைப்பொருள் ஒரு ஸ்கூட்டர் ,கார், செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.

இதே போல சுந்தராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி,சப் இன்ஸ்பெக்டர் ஞானப்பிரகாஷ் ஆகியோர் மதுக்கரை ரோட்டில் வாகன சோதனை நடத்தினார்கள். அப்போது பைக்கில் வந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தனர். அவரிடம் 9.4 கிராம் போதை பொருள், ஒரு பாக்கெட் பான் மசாலா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக அதை கடத்தி வந்த சுந்தராபுரம் குறிச்சி பகுதியைச் சேர்ந்த சகில் ( வயது 26 ) கைது செய்யப்பட்டார் . சீனிவாசா நகரை சேர்ந்த ஹரிஹரன், மனோஜ் குமார் ஆகியோரை தேடி வருகிறார்கள்.