கோவை கல்லூரி மாணவி தற்கொலை.. கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் ,பள்ளிவாசல் வீதியை சேர்ந்தவர் மணிகண்டன். டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் நளினி ( வயது 18) இவர் ஈச்சனாரி அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி. காம் ,சி. ஏ. படித்து வந்தார். கல்லூரிக்கு கட்டணம் (பீஸ்) கட்டுவதற்காக தந்தையிடம் பணம் கேட்டார். அவர் அடுத்த வாரம் பணம் கட்டலாம் என்று கூறினார். இதனால் மனமுடைந்த நளினி நேற்று அவரது வீட்டில் ஒரு அறையை பூட்டி கொண்டு மின்விசிறியில் சேலையைக் கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது தந்தை மணிகண்டன் குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Leave a Reply