கோவையில் அட்டகாசம் செய்த ரவுடிகள் 3 பேர் பெங்களூரில் கைது..!

கோவையில் ரவுடி கும்பல்களுக்கு இடையே நடந்த கோஷ்டி மோதலில் சத்யபாண்டி என்பவர் துப்பாக்கி சுட்டுக் கொல்லப்பட்டார். நீதிமன்றம் அருகே கோகுல் என்பவர் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதை தொடர்ந்து ரவுடி கும்பல்களின் அட்டகாசத்தை ஒடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. காமராஜர் புரம் கவுதம் உள்ளிட்ட ஏராளமான ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். சில ரவுடிகள் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர். போலீசார் தேடுவதால் ரவுடி கும்பல் வெளிமாநிலங்களுக்கு தப்பிச் சென்று விட்டது. இந்த நிலையில் கோவையில் அட்டகாசம் செய்த ரவுடி கும்பலை சேர்ந்த 3 பேரை பெங்களூரில் வைத்து கோவை போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களை கோவைக்கு கொண்டு வந்து விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.