கோவையில் வீட்டில் விபச்சார விடுதி நடத்திய 2 பெண்கள் கைது – 4 அழகிகள் மீட்பு..!

கோவை பாப்பநாயக்கன்பாளையம் டி.பி.எப். ரோடு ‘ராமசாமி லேஅவுட் உள்ள ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக ரேஸ்கோர்ஸ் போலீசுக்கு தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் பாண்டியம்மாள் அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது பெண்களை வைத்து விபச்சாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்த 4 அழகிகள் மீட்கப்பட்டு காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதை நடத்தி வந்ததாக சூலூர் அப்பநாயக்கன்பட்டியைச் சேர்ந்த நிர்மலா (வயது 49) சோமனூரை சேர்ந்த சப்னா என்ற சத்யா (வயது 30) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்..