வழுக்கையை மறைத்து 2-வது திருமணம்.. வெளுத்து வாங்கிய பெண் வீட்டார்..!!

மீபத்தில் பீகார் மாநிலம் கயா என்ற ஊரில் ஒரு வித்தியாசமான அதிர்ச்சிகர சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது தோபி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பஜவுரா கிராமத்தைச் சேர்ந்த ஆண் ஒருவருக்கு ஏற்கனவே திருமணமாகி இருந்துள்ளது.

ஆனால், அந்த நபர் இந்த விஷயத்தை மறைத்துவிட்டு தனக்கு முதல் திருமணம் போல காட்டிக்கொண்டு இரண்டாவதாக அந்த பெண்ணை திருமணம் செய்ய தயாராகி உள்ளார்.

இந்த விஷயம் மணப்பெண் வீட்டாருக்கு தெரிந்து விடக்கூடாது என்பதற்காக விக் வைத்து கொண்டு திருமண மண்டபத்துக்கு வந்துள்ளார். ஆனால் திருமணம் முடிந்த உடனேயே மணமகளின் உறவினர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டு உண்மை தெரிய வந்தது. இதனால் அவர்கள் மாப்பிள்ளைக்கு தர்மஅடி கொடுத்தனர். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.