காட்டில் இறந்து கிடந்த பெண் யானை..

கோவை பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகம், தோலம்பாளையம் பிரிவு, தோலம்பாளையம் மத்திய சுற்று, தடாகம் காப்புக்காடு, நீலாம்பதி சரகப் பகுதியில், காப்பு காட்டிற்குள், நேற்று வயதான பெண் யானை இறந்து கிடந்தது. இது வனப் பணியாளர்களின் வழக்கமான ரோந்துப் பணியின்போது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து பெரியநாயக்கன்பாளையம் வனச்சரக அலுவலர் தலைமையிலான குழுவினர் அந்த வனப் பகுதியைத் தணிக்கை செய்தனர். உடல்கூறாய்வு பரிசோதனை இன்று கோவை மாவட்ட வன அலுவலர், உதவி வனப் பாதுகாவலர், தன்னார்வ தொண்டு அமைப்பினர்கள், கிராம வனக் குழுத் தலைவர் மற்றும் வனக் பணியாளர்கள் முன்னிலையில், வனக் கால்நடை அலுவலர் தலைமையிலான மருத்துவக் குழுவினரால் நடைபெற உள்ளது.