கோவையில் வரும் 27-ந் தேதி விவசாயிகள் குறைகேட்பு கூட்டம்..!

கோவையில் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் வருகிற 27-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது என்று மாவட்ட கலெக்டர் சமீரன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கோவை மாவட்டத்தில் மாதந்தோறும் இறுதி வெள்ளிக்கிழமை விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, ஜனவரி மாதத்துக்கான குறைகேட்பு கூட்டம் வருகிற வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தின் 2-வது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெறுகிறது. இதில், விவசாயிகள் கலந்து கொண்டு விவசாயம் தொடா்பான கோரிக்கை மனுக்களை அளிக்கலாம். முன்னதாக, காலை 9.30 மணிக்கு உற்பத்திக்குழு கூட்டம் நடைபெறுகிறது.

உற்பத்திக் குழு மற்றும் விவசாயிகள் குறைகேட்பு கூட்டங்களில் அனைத்து விவசாயிகளும் தவறாமல் கலந்து கொண்டு தங்களது குறைகளைத் தெரிவித்து நிவா்த்தி செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.