கோவையில் இருதரபினர் இடையே கோஷ்டி மோதல் – வாலிபர்கள் 4 பேர் கைது..!

கோவை கரும்பு கடையை சேர்ந்தவர் மன்சூர் ரகுமான் (வயது 24). எலக்ட்ரீசியன்.
இவர் சம்பவத்தன்று தனது தம்பியுடன் உக்கடம் புல்லுகாடு அடுக்கு மாடி குடியிருப்புக்கு நண்பரை பார்க்க சென்றார். அங்கு ஒரு பேக்கரி அருகே தனது நண்பரை சந்தித்து பேசிக் கொண்டு இருந்தார். அப்போது நண்பரின் சகோதரர் சாருக்கான் என்பவர் அங்கு வந்து திடீரென மன்சூர் ரகுமானை தகாத வார்த்தைகளால் திட்டி அங்கிருந்து சென்றார். பின்னர் மன்சூர் ரகுமான் மற்றொரு நண்பராக ஆசிக் என்பவருடன் பேசி கொண்டு இருந்தார்.
சிறிது நேரத்தில் மீண்டும் அங்கு வந்த சாருக்கான் மற்றும் அவரது நண்பர்கள் ஹதர், அஜித் ஆகியோர் மன்சூர் ரகுமானை திட்டி தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து குத்தி அங்கிருந்து சென்றனர். இதனால் கோபம் அடைந்த மன்சூர் ரகுமான் தனது நண்பர்களான அனிஸ்கரன் (21), ஆசிக் (22), பீர்முகமது ஆகியோரை அழைத்து புல்லுகாடு வந்தார். அப்போது அங்கு வந்த சாருக்கானின் நண்பர் அஜித்தை தடுத்து நிறுத்தி சாருக்கான் எங்கே என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். இதில் ஆத்திரம் அடைந்த 4 பேரும் அஜித்தை தகாத வார்த்தைகளால் திட்டி அங்கிருந்த கல்லை எடுத்து தாக்கி சென்றனர். பலத்த காயம் அடைந்த அஜித்தை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
இதுகுறித்து அஜித் பெரியகடை வீதி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அஜித்தை தாக்கிய மன்சூர் ரகுமான், அனிஸ்கரன், ஆசிக் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதேேபான்று மன்சூர் ரகுமான் அளித்த புகாரின் பேரில் சாருக்கானை கைது செய்து சிறையில் அடைத்தனர். பீர்முகமது, ஹதர், அஜித் ஆகியோரை விசாரணை நடத்தி வருகின்றனர்.