2 வயது ஆண் குழந்தை மர்ம மரணம்..

கோவை சாய்பாபா காலனி,என். எஸ் .ஆர். ரோட்டில் உள்ள நெசவாளர் காலனி சேர்ந்தவர் ராஜன் (வயது 44) லாரி கிளீனர். இவரது 2 வயது ஆண் குழந்தை தன்வீன். இவன் பிறப்பில் இருந்து நுரையீரல் பாதிக்கபட்டிருந்தான்.இதற்காக தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தனர்.இந்த நிலையில் நேற்று தூங்கிக் கொண்டிருந்த தன்வீனுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் அவன் இறந்துவிட்டான். இது குறித்து அவரது தந்தை ராஜன் சாய்பாபா காலனி போலீசில் புகார் செய்துள்ளார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.