சாலையில் அரசு பஸ் முன்பு குடுகுடுவென ஓடிய 2 புலிக்குட்டிகள்… என்ன அழகு… எத்தனை அழகு… என கண்டு ரசித்த பயணிகள்.!!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் புலிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. வனப்பகுதியில் உள்ள சாலைகளில் இரவு நேரங்களில் புலிகள் அவ்வப்போது நடமாடுகின்றன. இந்த நிலையில் அதிகாலை சத்தியமங்கலத்தில் இருந்து கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள குன்றி மலை கிராமத்திற்கு செல்வதற்காக அரசு பஸ் சென்று கொண்டிருந்தது.
குன்றி வனச்சாலையில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது வனப்பகுதியில் இருந்து வெளியேறிய இரண்டு புலி குட்டிகள் சாலையில் அங்கும் இங்கும் ஓடின. அரசு பஸ்சின் முகப்பு விளக்கு வெளிச்சத்தை கண்டு இரண்டு புலிக்குட்டிகளும் சிறிது தூரம் குடுகுடுவென ஓடிய காட்சியை பஸ்சில் இருந்த பயணிகள் கண்டு ரசித்தபடி என்ன அழகு எத்தனை அழகு என பேசிக்கொண்டனர். சிறிது தூரம் ஓடிய புலிக்குட்டிகள் பின்னர் வனப்பகுதிக்குள் சென்று மறைந்தன. இந்த காட்சியை பஸ்ஸில் சென்ற பயணிகள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.