திருச்சியில் கலைஞர் சிலை அடிக்கல் நாட்டினர் அமைச்சர்கள்…

திருச்சி தெற்கு மாவட்ட கழகத்தின் சார்பாக திருச்சி கிழக்கு மாநகரம் கிழக்குத் சட்டமன்ற தொகுதியில் டி வி எஸ் டோல்கேட் ரவுண்டானவில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் திருஉருவச்சிலை அமைய உள்ள பீடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தலைமையில் மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே. என். நேரு அவர்கள் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார் விழாவில் நகரக் கழகச் செயலாளர் மதிவாணன் சட்டமன்ற உறுப்பினர்கள் இனிகோஇருதயராஜ் அப்துல் சமத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் வண்ணைஅரங்கநாதன் சேகரன் மாவட்ட நிர்வாகிகள் கோவிந்தராஜ் செங்குட்டுவன் மூக்கன் லீலாவேலு குணசேகரன் மாநகர நிற்வாகிகள் நுர்காண் சந்திரமோகன் பொன் செல்லையா சரோஜினி பகுதி கழக செயலாளர்கள் மணிவேல் நீலமேகம் தர்மராஜ் ராஜ்முகமது மோகன் பாபு சிவக்குமார் மற்றும் ஒன்றிய நகர பேரூர் வட்ட கழக செயலாளர்கள் அணிகளின் அமைப்பாளர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.