ஒரே நாளில் சாலை விபத்தில் 2 பேர் பரிதாப பலி..

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஜமீன் ஊத்துக்குளி, காந்தி நகரைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகன் சக்தி கணேஷ் (வயது 21) நேற்று இவரும் நல்லூர் சர்ச் காலனியை  சேர்ந்த சதீஷ்குமார் ( வயது 18)என்பவரும் காந்தி நகரை சேர்ந்த அர்ஜூனா ( வயது 27) என்பவருடன் பைக்கில் ஆத்து பொள்ளாச்சி- ரோட்டில் சென்று கொண்டிருந்தனர். பைக்கை அர்ஜுனா ஓட்டினார் . அப்போது திடீரென்று நிலை தடுமாறி 3 பேரும் கீழே விழுந்தனர் . இதில் படுகாயம் அடைந்த சக்தி கணேஷ், அர்ஜுனா சதீஷ்குமார் ஆகியோர் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் சக்தி கணேஷ் இறந்தார். இது தொடர்பாக பொள்ளாச்சி தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் பைக் ஓட்டி வந்த அர்ஜுனா மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதே போல ஆலந்துறை அருகே உள்ள இக்கரை போளுவாம் பட்டியையை சேர்ந்தவர் வீரன் (வயது 63) இவர் நேற்று மொபட்டில் நரசிபுரம் -ஈஷா ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்தார். தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அதே இடத்தில் இறந்தார். இதுகுறித்து ஆலந்துறை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.