இருகூரில் தொட்டிக்குள் இறங்கிய 2 பேர் விஷவாயு தாக்கி மயக்கம்..!

கோவை இருகூர் சர்ச் வீதியில் வசிப்பவர் மருதுபாண்டியன்(வயது 50) இவரது வீட்டில் 10’நீளம் 5’அகலம் 7’ஆழம் உள்ள தண்ணீர் தொட்டி உள்ளது. இதன் உட்புறம் வர்ணம் பூச சுக்ரீவ் (வயது 20) மற்றும் வீட்டு உரிமையாளர் .மருது பாண்டியன் (வயது 43) ஆகியோர் இறங்கினார்கள்.

அப்போது விஷவாயு தாக்கி மயங்கினார்கள். மயங்கிய நிலையில் கிடந்தவர்களை தீயணைப்பு பணியாளர்கள் மூச்சுக்கருவிகள் பயன்படுத்தி உள்ளே இறங்கி உயிருடன் மீட்டனர். அவர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பப்பட்டார்கள்.