மனைவிக்கு கத்திக்குத்து – பட்டதாரி கணவர் கைது..!

மனைவிக்கு கத்திக்குத்து – பட்டதாரி கணவர் கைது..! கோவை காளப்பட்டி நியூ காலனியை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி. இவரது மகன் லோகேஷ் குமார் (வயது 26 ) பி.பி.ஏ பட்டதாரி பில்கலெக்டராக வேலை பார்த்து வருகிறார் .இவரது மனைவி கோகில வேணி ( வயது 24) கருத்து வேறுபாடு காரணமாக கோகில வேணிகணபதி மணியகாரம்பாளையம் கக்கன் வீதியில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார்..இந்த நிலையில்லோகேஷ் குமார் மனைவியை தேடிச்சென்று அவரிடம் தகராறு செய்தார் .பின்னர் மறைத்து வைத்திருந்த கத்தியால் மனைவியை குத்தினார்” இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்து விட்டு தப்பி ஓடிவிட்டார் .இது குறித்து கோகிலவேணி சரவணம்பட்டி போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து லோகேஷ் குமாரை நேற்று இரவு கைது செய்தனர். இவர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் |கொலை மிரட்டல் ,தாக்குதல் உட்பட 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.