மது பழக்கத்தால் 2 பேர் தற்கொலை..!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள சந்தே கவுண்டன்பாளையத்தைச் சேர்ந்தவர் பழனிசாமி (வயது 52) கூலி தொழிலாளி .குடிப்பழக்கம் உடையவர் .இவர் வாழ்க்கையில் வெறுப்படைந்து நேற்று அவரது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதேபோல கோவை பெரியநாயக்கன்பாளையம் பாலமலை ரோடு வெங்கடேசலு நகரை சேர்ந்தவர் தினேஷ் குமார் ( வயது 34 )இவரும் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர். எந்த வேலைக்கும் செல்வதில்லை .இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் அங்குள்ள ஒரு பேக்கரி அருகே விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் அவர் இறந்து விட்டார் .இது குறித்து அவரது தாயார் கலைமணி பெரியநாயக்கன்பாளையம் போலீசில் புகார் செய்துள்ளார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.