வெடிபொருட்களுடன் சிக்கிய கோவை வாலிபர்களிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் தீவிர

கோவையில் கார் வெடிப்பு, மங்களூருவில் குக்கர் குண்டு வெடிப்பு சம்பவங்கள் தொடர்ந்து கோவையில் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். கோவையில் தேசிய புலனாய்வு முகமை ( என் ஐ ஏ )அதிகாரிகள் முகாமிட்டு விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் கோவை குரும்பபாளையம் வில்லேஜ் நகர் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் ( வயது 35 )என்பவர் ஆன்லைனில் பொட்டாசியம் 100 கிராம், நைட்ரேட்,100 கிராம் சல்பர்ஆகிய வெடிபொருட்களை வாங்கி உள்ளதாக என் ஐ.ஏ அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து செந்தில்குமாரை கோவை போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் உள்ள என்.ஐ. ஏ அலுவலகத்துக்கு அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர் .அங்கு செந்தில்குமாரிடம் நடத்திய விசாரணையில் அவர் பீளமேடு தண்ணீர் பந்தல் அருகில் சாலையோரம் தள்ளுவண்டியில் பழவியாபாரம் செய்து வருவதாகவும், தன்னிடம் பணி புரியும் மாரியப்பன் ( வயது 26 )என்பவர் தனது செல்போன் மூலம் ஆன்லைனில் பொருட்கள் வாங்கியுள்ளார் .ஆனால் வெடிபொருள்கள் தான் வாங்கினார் என்பது எனக்குத் தெரியாது என்று கூறினார். இதை தொடர்ந்து மாரியப்பனை அழைத்து வந்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.விசாரணையில் அவர் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, காந்திநகர் பகுதியைச் சேர்ந்த கோமதி தேவர் என்பவரது மகன்என்பதும் |அவரது சொந்த ஊரில் நடந்த தாக்குதல் சம்பவத்தில் கொலை முயற்சி வழக்குகள் இருப்பதும், கஞ்சாவிற்ற வழக்கில் சிறைக்கு சென்று வெளியே வந்த பின் செந்தில்குமார் கடையில் வேலை பார்த்த போது ஆன்லைனில் வெடி பொருட்கள் வாங்கியதும் அந்த வெளி பொருட்கள் அவரிடம் இருந்ததும் தெரியவந்தது. மேலும் அவர்கள் நடத்தி விசாரணையில் திடுக்கிடும் தகவல் வருமாறு:- மாரியப்பன் செந்தில்குமாரின் தள்ளுவண்டி பழக்கடையில் வேலை பார்த்த போது அவரது செல்போனில் ஆன்லைன் மூலமாக மேற்கண்ட பொருட்கள் வாங்குவதற்கு ஆர்டர் செய்துள்ளார். பின்னர் அந்த வெடிப்பொருட்களுடன் தனது சொந்த ஊரான கோவில்பட்டிக்கு சென்று முன் விரோதம்காரணமாக மகாராஜா என்பவர் தரப்பினரை பழிவாங்கவெடிகுண்டு தயாரிக்க முயன்றுள்ளார்.ஆனால் அங்கு சூழ்நிலை சரியில்லாத காரணத்தால்,வெடிபொருட்களுடன் சென்னை கோயம்பேடு சென்று அங்குள்ள ஒரு லாரி சர்வீசில்வேலை பார்த்துள்ளார் .அதன் பிறகு மீண்டும் கோவைக்கு வந்தது தெரியவந்தது. இந்த நிலையில் தீவிர விசாரணைக்கு பிறகு மாரியப்பன், செந்தில் குமார் இருவரையும் என்.ஐ.ஏ அதிகாரிகள் சரவணம்பட்டி போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதில் மாரியப்பன் வைத்திருந்த வெடிபொருட்களை பறிமுதல் செய்தனர். செந்தில்குமாரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.