தூக்குபோட்டு 2 பேர் தற்கொலை..

கோவை சூலூர் பக்கம் உள்ள பட்டணம் ,அம்மன் நகரை சேர்ந்தவர் சுந்தர்ராஜ் (வயது 52) பாத்திர வியாபாரம் செய்து வந்தார் .இவர் கடந்த சில நாட்களாக உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்து நேற்று அவரது மனைவியின் சேலையை விட்டதில் கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .இது குறித்தும் மனைவி ஜெயா சூலூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்தி வருகிறார்கள்.

இதேபோல கோவில்பாளையம் பக்கம் உள்ளகோட்டைபாளையம் செங்காடு பகுதியை சேர்ந்தவர் அண்ணாவு ( வயது 58) கூலி தொழிலாளி.குடிப்பழக்கம் உடையவர்.இதனால் கணவன் மனைவிக்கு இடையே நேற்று தகராறு ஏற்பட்டது .இதில் ஆத்திரமடைந்த அண்ணாவு  நேற்று கோவில்பாளையம் பகுதியில் உள்ள செல்லமுத்து தோட்டத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இது குறித்து அவரது மனைவி லட்சுமி கோவில் பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.