கோவையில் கார் மோதி வடமாநில தொழிலாளர்கள் 2 பேர் பரிதாபமாக உயிரிழப்பு..!

கோவை: பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் நிதிஷ்குமார் வயது 24) அவுடேஷ்குமார் (வயது 24) இவர்கள் இருவரும் கோவை போத்தனூர் செட்டிபாளையம் அருகே உள்ள சிராபாளையத்தில் தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தனர். இதற்காக அந்த நிறுவன வளாகத்தில் உள்ள குடியிருப்பில் தங்கி இருந்தனர் .நேற்று இருவரும் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்க மலுமிச்சம்பட்டிக்கு வந்தனர். கடைகளில் பொருட்களை வாங்கிவிட்டு மீண்டும் குடியிருப்பை நோக்கி நடந்து சென்றனர். மலுமிச்சம்பட்டி- ஒத்தக்கால் மண்டபம் ரோட்டில் வந்த போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு கார் இவர்கள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் வழியில் 2 பேரும் பரிதாபமாக இறந்தனர்.இது குறித்து செட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற காரைத் தேடி வருகிறார்கள்.