தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது..!

கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில்
கோவை மாவட்டத்தில் சட்டத்திற்கு விரோதமான செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் பேரூர் உட்கோட்டம் தொண்டாமுத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்ட விரோதமாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தொண்டாமுத்தூர் காவல்துறையினர் சம்பவ இடமான சந்தைப்பேட்டை விநாயகர் கோயில் பகுதிக்கு விரைந்து சென்று சோதனை செய்தனர். அங்கு ஆன்லைன் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்த தொண்டாமுத்தூர் பகுதியை சேர்ந்த முருகன் என்பவரது மகன் நடராஜ் (வயது 51) ஆறுமுகம் மகன் நாகராஜ் (வயது42)ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 3 நம்பர் லாட்டரி சீட்டுகள், செல்போன்1 மற்றும் ரூ 1600 பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேற்படி நபர்கள் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர். சட்டத்திற்கு விரோதமான செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார். இதுபோன்ற சட்டத்திற்கு விரோதமான செயல்களில் ஈடுபடும் நபர்கள் குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க பொதுமக்கள் தயங்காமல் அழைத்திடுங்கள் .கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும்.இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.