கோவை கல்லூரி மாணவிகள் 2 பேர் திடீர்மாயம்

கோவை அருகே உள்ள சூலூர், கலங்கல் கங்கா நகரை சேர்ந்தவர் ஆறுமுகம், இவரது மகள் சவுந்தர்யா (வயது 19) அங்குள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி .காம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார் .கடந்த 2-ந்தேதி இவர் நீண்ட நேரம் செல்போனில் பேசிக் கொண்டிருந்தாராம். இதை அவர் தாயார் கண்டித்தார். இதனால் ஆத்திரமடைந்த சவுந்தர்யா தனது செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு எங்கோ சென்றுவிட்டார் .இது குறித்து தாயார் சுமித்ரா சூலூர் போலீசில் புகார் செய்துள்ளார்.

இதே போல பொள்ளாச்சி டி.கோட்டம் பட்டியை சேர்ந்தவர் கோபால் ராஜ்..இவரது மகள் சுவாதி (வயது 19) கோவை அருகே உள்ள ஒரு கல்லூரியில் பி .காம் ,சி -ஏ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.கடந்த 4-ந் தேதி கல்லூரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை .எங்கோ மாயமாகிவிட்டார். இதுகுறித்து அவரது தந்தை கோபால் ராஜ் மகாலிங்கபுரம் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார் .போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.