2 பைக்குகள் நேருக்கு நேர் மோதல் : 3 பேர் பரிதாப பலி – கோவையில் சோக சம்பவம்..

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே உள்ள சோமந்துறை சித்தூர் பகுதியை சேர்ந்தவர் சிவகுமார் (வயது 45) இவரது மகன் தினேஷ் ( வயது 17)சிவக்குமாரின் மனைவி உடல்நல குறைவு காரணமாக பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் .இந்த நிலையில் சிவகுமார் நேற்று இரவு வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் தனது மனைவிக்கு சாப்பாடு கொண்டு சென்றார். அவருடன் மகன் தினேஷ் குமாரும் சென்றார். இவர்கள் அங்குள்ள நாலு மூலை சுங்கம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த மோட்டார் சைக்கிளும், இவர்களது பைக்கும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் சிவக்குமார் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த புளியங்கண்டி பகுதியைச் சேர்ந்த ரமேஷ் (வயது 19) சஞ்சீவி (வயது 16) ஆகியோர் படுகாயம் அடைந்து அதே இடத்தில் பரிதமாக இறந்தார்கள்.. தினேஷ் குமார் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார் .அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர்களது உடல் பிரேத பரிசோதிக்காக கோட்டூர் அரசு மருத்துவத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டது .இது குறித்து கோட்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள் .இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது..