தொழிலாளியின் மொபட்டை தீ வைத்து எறித்த மர்ம நபர்-போலீசார் விசாரணை..!

மேட்டுப்பாளையம் மட்டக்கார வீதியை சேர்ந்தவர் சலீம் என்கிற சதீஷ் (வயது 35). இவர் அன்னூர் ரோடு பகுதியில் உள்ள காய்கறி மைதானத்தில் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று இரவு தனது நண்பரின் மொபட்டை எடுத்துக் கொண்டு சதீஷ் வீட்டுக்கு வந்தார். பின்னர் வீட்டின் வெளியே மொபட்டை நிறுத்திவிட்டு தூங்க சென்றார். இன்று காலை எழுந்து வந்து பார்த்தார். அப்போது வீட்டில் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மொபட்டை மர்ம நபர் யாரோ தீ வைத்து எறித்து இருந்தனர். இதில் மொபட் முழுவதும் எரிந்து எழும்புக்கூடாக மாறி இருந்தது.

இதைகண்டு அதிர்ச்சி அடைந்த சதீஷ் இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரியின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மொபட்டை தீவைத்த மர்ம நபர் யார்? எதற்காக மொபட் தீ வைக்கப்பட்டது. முன்விரோதத்தில் தீ வைத்தார்களா என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.