கோவையில் காணாமல் போன 13 வயது சிறுவன் – நீலகிரியில் காவல்துறை மீட்பு..!!

கோவை மசக்காளிபாளையம் அருகே உறவினர் வீட்டுக்கு தனது தாயுடன் விடுமுறை கழிக்க வந்த 13 வயது சிறுவன் நேற்று காலை வீட்டை விட்டு வெளியே வந்து மாயமானார்.

இதைத் தொடர்ந்து சிறுவனின் தாயார் மகாலட்சுமி E1 சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் மாநகர காவல் துறையின் சார்பில் ஆறு தனி படைகள் அமைக்கப்பட்டு சிறுவனின் புகைப்பட அடையாளங்களை வைத்து தேடி வந்தனர். அதேபோல அனைத்து காவல் நிலையங்களுக்கும் காவல்துறையின் சார்பில் தகவல் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் சிறுவன் இன்று நீலகிரி மாவட்ட காவல் துறையினரால் மீட்கப்பட்டுள்ளார். சிறுவனை மீட்ட காவல்துறையினர் கோவை மாநகர காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் போலீசார் கோவையில் இருந்து நீலகிரி விரைந்துள்ளனர்.