கோவை மருத்துவமனை இளம்பெண் தற்கொலை – காதலித்து திருமணத்துக்கு மறுத்த காதலன் கைது..!

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை சேர்ந்தவர் மேகல பிரியா. இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் லேப் டெக்னீசியனாக பணி புரிந்தார். இவர் ரத்தினபுரி பகுதியில் வாடகைக்கு அறை எடுத்து தங்கி இருந்தார். இந்நிலையில் கடந்த 16 ஆம் தேதி அவர் பணிக்கு செல்லவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அந்தப் பெண்ணுடன் பணி புரியும் சக ஊழியர்கள் மேகலா பிரியாவை செல்போனில் தொடர்பு கொண்டனர். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. இதை அடுத்து ஊழியர்கள் அவர் தங்கியிருந்த அறைக்கு சென்றனர். அங்கு அரை கதவு திறக்கப்படாமல் இருந்தது. நீண்ட நேரம் அவர்கள் கதவை தட்டியும் திறக்கப்படாததால் அவர்கள் ரத்தினபுரி காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பெயரில் போலீசார் விரைந்து வந்து இளம் பெண் தங்கி இருந்த அறை கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது மேகலா பிரியா தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் காணப்பட்டார். உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் இளம் பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். மேலும் அந்தப் பெண்ணின் செல்போனை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில் அந்த இளம் பெண்ணிற்கு தர்மபுரி மாவட்டம் ஆரூர் அருகே உள்ள கூடலூர் பகுதியில் சேர்ந்த பிரசாந்த் என்பவர் உடன் காதல் ஏற்பட்டது தெரியவந்தது. மேலும் பிரசாந்த் தனியார் நிறுவனத்தில் சூப்பர்வைசராக பணி புரிந்தார். இவர் செல்போனில் பேசி காதலை வளர்த்து வந்தார். மேலும் பிரசாந்த் கோவை வந்து மேகலா பிரியாவை நேரில் சந்தித்து பேசி உள்ளார். இந்நிலையில் மேகலா பிரியா தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி பிரசாந்தை வலியுறுத்தினார். ஆனால் அவர் திருமணம்த்திற்கு மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று இருவரும் செல்போனில் பேசி உள்ளனர். அப்பொழுது மீண்டும் மேகலா பிரியா திருமணத்திற்கு வலியுறுத்தி உள்ளார். ஆனால் பிரசாந்த் மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதன் பின்னர் பிரசாந்த் தன்னை காதலித்து ஏமாற்றி விட்டதால் இனி வாழக் கூடாது என்று முடிவெடுத்து மேகலா பிரியா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து போலீசார் காதலன் பிரசாந்தை இளம்பிள்ளை தற்கொலைக்கு தூண்டியதாக கைது செய்தனர்.