10-ம் வகுப்பு மாணவன் எங்கோ மாயம்..!

கோவை சரவணம்பட்டி சிவானந்தபுரம் . ஜனதா நகரை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவரது மகன் ராகேஷ் (வயது15) அங்குள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.உடல் நல குறைவு காரணமாக 2 -வது கட்ட இடைதேர்வு இவர் எழுதவில்லை.இதனால் மன அழுத்தத்துடன் காணப்பட்டார் .இந்த நிலையில் நேற்று அதிகாலையில் ராகேஷ் வீட்டில் இருந்த சைக்கிள் மற்றும் செல்போனுடன் எங்கோ மாயமாகிவிட்டார். இது குறித்து அவரது தாயார் இந்திராணி சரவணம்பட்டி போலீசில் புகார் . இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்.