பயணிகளின் கவனத்திற்கு… கோவை -சேலம் பாசஞ்சர் ரயில் வருகிற 31ஆம் தேதி வரை ரத்து- ரயில்வே நிர்வாகம் தகவல்..!

கோவை: சேலம் ரயில்வே கோட்ட அலுவலகம் சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறி இருப்பதாவது:-
கோவை மார்க்கம் வாஞ்சிபாளையம், சோமனூர் இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனால் நேற்று முதல் வருகிற 31-ஆம் தேதி வரை சேலம்-கோவை பாசஞ்சர் ரயில்(06803), கோவை-சேலம் பாசஞ்சர் (06802) ஆகிய அனைத்து ரயில்களும் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும் வாஞ்சிபாளையம், திருப்பூர் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் சேலம் வழியாக இயக்கப்படும் ரயிலில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.அதன்படி ஆலப்புழா ரயில் நிலையத்திலிருந்து இன்று காலை 6 மணிக்கு புறப்பட வேண்டிய ஆலப்புழா-தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயில் காலை 9 மணிக்கு புறப்படும். இதனையடுத்து எர்ணாகுளம் ரயில் நிலையத்திலிருந்து காலை 9:10 மணிக்கு புறப்பட வேண்டிய எர்ணாகுளம் பெங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் 11:40 மணிக்கு புறப்படும் . இவ்வாறு அந்த செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.