கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள நம்பர் 4 வீரபாண்டியை சேர்ந்தவர் மணிமேகலை.இவருக்கு ஏற்கனவே ஒரு குழந்தை உள்ளது.இந்த நிலையில் மணிமேகலை மீண்டும் கர்ப்பமானார்.இவருக்கு இன்று பிரசவ வலி ஏற்பட்டது.இதையடுத்து 108 ஆம்புலன்ஸ்க்கு குடும்பத்தினர் தகவல் கொடுத்தனர்.ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருக்கும் போது மணிமேகலைக்கு அதிக பிரசவலி ஏற்பட்டது.இதையடுத்து ஆம்புலன்ஸ் டிரைவர் வேனை ரோட்டில் ஓரமாக நிறுத்தினார்.ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பிரசவம் பார்த்தனர்.அவருக்கு வேனில்வைத்து அழகான பெண் குழந்தை பிறந்தது.பின்னர் தாயும் குழந்தையும் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர் .வேனுக்குள் சுகப்பிரசவம் பார்த்த ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு குடும்பத்தினரும், பொதுமக்களும் பாராட்டு தெரிவித்தனர்.
Leave a Reply