ஸ்டேஷனரி கடையில் திடீர் தீ விபத்து: ரூ.6 லட்சம் பொருட்கள் எரிந்து சேதம்..!

கோவை அருகே உள்ள துடியலூர் அரவான் கோவில் வீதியைச் சேர்ந்தவர் வர்க்கீஸ் மைக்கேல் பொன் ரத்தினம் ( வயது 38) இவர் சரவணம்பட்டி பகுதியில் உள்ள அஞ்சுகம் நகரில் பணிமய மாதா ஸ்டோர் என்ற பெயரில் ஸ்டேஷனரி கடை நடத்தி வருகிறார். கடந்த 23ஆம் தேதி இவர் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.அவரது கடையில் இருந்து புகை வருவதாக பக்கத்து வீட்டில் வசிப்பவர் போன் செய்தார்.அவர் வந்து பார்த்த போது கடை முழுவதும் எரிந்து கொண்டிருந்தது .இதில் கடையில் உள்ள பொருட்கள் அனைத்தும் எரிந்து சேதம் அடைந்தது. சேதமதிப்பு ரூ.6 லட்சம் இருக்கும். மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதுகுறித்து சரவணம்பட்டி போலீசில் வர்கீஸ் மைக்கேல் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.