108 ஆம்புலன்சில் பிறந்த அழகிய ஆண் குழந்தை – பிரசவம் பார்த்த ஊழியர்களுக்கு குவியும் பாராட்டுக்கள்.!!

கோவை அருகே உள்ள கணுவாய் பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி தேவி ( வயது 26) நிறை மாத கர்ப்பிணி .இவருக்கு நேற்று திடீர் பிரசவ வலி ஏற்பட்டது. உடனே உறவினர்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்தனர். அதன்படி ஆம்புலன்ஸ் ஊழியர்கள் விரைந்து வந்து அவரை ஆம்புலன்சில் ஏற்றி வைத்துமருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றர் .மேலும் அவரை பரிசோதனை செய்து பார்த்தபோது தேவிக்கு பனிக்குடம் உடைந்து குழந்தையின் தலை வெளியே வந்தது தெரிவந்தது .இதையடுத்து ஆம்புலன்ஸ் மருத்துவ நிபுணர் தமிழழகன் பைலட் சக்தி குமார் ஆகியோர் உறவினர்களின் உதவியுடன் ஆம்புலன்சில் வைத்து பிரசவம் பார்த்தனர். இதில் தேவிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அதன் பிறகு தாயும் சேயும் வீரபாண்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர.இளம் பெண்ணுக்கு ஆம்புலன்சில் சுகபிரசவம் பார்த்த ஊழியர்களுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்..