பொள்ளாச்சி மார்க்கெட்டில் சூதாட்டம்- வியாபாரிகள் 6 பேர் கைது..!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டில் பழைய இரும்பு கடை நடத்தி வருபவர் நடராஜ் ( வயது 65) இவரதுகடையில் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக பொள்ளாச்சி மேற்கு பகுதி போலீசுக்கு நேற்று மாலை தகவல் வந்தது. சிறப்பு இன்ஸ்பெக்டர் மைக்கேல்சகாயராஜ் அங்கு திடீர் சோதனை நடத்தினார் .அப்போது பணம் வைத்து சீட்டு விளையாடியது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக பொள்ளாச்சி குமரன் நகரை சேர்ந்த நடராஜ் ( வயது 65) குழந்தைசாமி (வயது 60) பஷிர் அகமது ( வயது 57) சுந்தரம் லே அவுட்டை சேர்ந்த அழகு சேது ( வயது 64) வெங்கடாசா காலனியை சேர்ந்த முருகானந்தம் ( வயது 63) லிங்கையன் வீதியை சேர்ந்த சண்முகம் (வயது 53) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சீட்டு விளையாட பயன்படுத்தப்பட்ட ரூ. 24 ஆயிரத்து 120 பறிமுதல் செய்யப்பட்டது..