கோவை வியாபாரி மனைவியை செல்போனில் ஆபாசமாக படம் எடுத்து பணம் கேட்டு மிரட்டல் – ஊழியருக்கு போலீசார் வலைவீச்சு..!

கோவை ராமநாதபுரம் நஞ்சுண்டாபுரம் ரோட்டில் வியாபாரி ஒருவர் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் அவரது உறவினரான வாலிபர் உட்பட 4 பேர் வேலை பார்த்து வந்தனர். உறவுக்கார வாலிபரின் நடத்தை சரியில்லாததால் அந்த வாலிபரை வியாபாரி வேலையை விட்டு நிறுத்தினார். இதனால் அந்த வாலிபர் ஆத்திரமடைந்தார். இந்த நிலையில் வியாபாரியின் செல்போனுக்கு அந்த வாலிபர் சில ஆபாச படங்களை அனுப்பினார். உறவினர் என்பதால் கடையில் வேலை பார்த்த போது வியாபாரியின் வீட்டுக்கு அவர் அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது வியாபாரி மனைவிக்கு தெரியாமல் அவரை வாலிபர் செல்போனில் ஆபாசமாக படம் எடுத்துள்ளார். அந்த ஆபாச படங்கள் தான் வியாபாரின் செல்போனுக்கு வந்திருந்தது. அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த வியாபாரி அந்த வாலிபரை தொடர்பு கொண்டு கண்டித்தார் .அதற்கு அந்த வாலிபர் இந்த படங்கள் சமூக வலைதளங்களில் பரப்பாமல் இருக்க வேண்டுமானால் எனக்கு ரூ. 3 லட்சம் தர வேண்டும் இல்லாவிடில் சமூக வலைதளங்களில் போட்டு உன் குடும்ப மானத்தை வாங்கி விடுவேன் என்று மிரட்டியுள்ளார். மேலும் அதிர்ச்சி அடைந்த வியாபாரி இது குறித்து ராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த வாலிபரை தேடி வருகிறார்கள்..