செம்பரம்பாக்கம் ஏரியில் 1000 கனஅடி நீர் வெளியேற்றம்- கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!

காஞ்சிபுரம், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 1000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

மாண்டஸ் புயல் ஆய்ந்து ஓய்ந்த பிறகும் அதன் தாக்கம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது வடதமிழகத்தில் அங்கங்கே மழைபெய்து வந்ததால், நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன.

இதனால்ஆரம்பகட்டத்தில் 100 கனஅடி நீர் வீதம் திறக்கப்பட்டு தற்போது அது அதிகரித்து வருகிறது . அதன்படி, தற்போது காஞ்சிபுரத்தில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரியில் 1000கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.