ஓடும் பஸ்சில் பெண் பயணியிடம் நைசாக நகை திருடிய இளம் பெண் கைது..!

கோவை அருகே உள்ள சூலூர் ராமசாமி பிள்ளை வீதியை சேர்ந்தவர் சையத் அலி. இவரது மனைவி ஹாஜாரா பேகம் ( வயது 42 )இவர் நேற்று காலை சூலூரில் இருந்து உடுமலையில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு செல்வதற்காக அரசு பஸ்சில் ஏறி பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது பஸ்சில் அவருக்கு அருகில் ஒரு பெண் அமர்ந்திருந்தார். பஸ் புறப்பட்ட சிறிது நேரத்தில் ஹாஜார பேகம் அணிந்திருந்த 4 பவுன் தங்க செயினை அந்த பெண் நைசாக பறித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஹாஜாரா பேகம் சுதாரித்துக் கொண்டு பஸ்சில் இருந்தவர்கள் உதவியுடன் அந்தப் பெண்ணை மடக்கி பிடித்து சூலூர் போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில் அந்தப் பெண் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த செல்வம் என்பவரின் மனைவி காயத்ரி (வயது 25) என்பது தெரிய வந்தது. இவரை போலீசார் கைது செய்தனர்.பட்டப்பகலில் ஓடும் பஸ்சில் பெண் பயணியிடம் பெண் ஒருவர் நகை திருடிய சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.