100 சதவீத வாக்கு… இருகூர் பேரூராட்சியில் விழிப்புணர்வு.!!

தேர்தல் ஆணையம் நூறு சதவீத வாக்கினை மக்களிடத்தில் முழுமையாக கொண்டு சேர்க்கும் விதத்தில் அனைத்து பகுதிகளிலும் விழிப்புணர்வினை ஏற்படுத்தி வருகிறது . அதன் ஒரு பகுதியாக கோயமுத்தூர் தொகுதி தலைமை தேர்தல் அலுவலரின் அறிவுறுத்தலின்படி சூலூர் வட்டம் இருகூர் பேரூராட்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் கலையரசி தலைமையில் தினசரி நாள்காட்டியில் 100% வாக்கினை விளம்பரப்படுத்தி இருகூர் பகுதியில் பல்வேறு பகுதிகளில் உள்ள பொது மக்களுக்கு வழங்கப்பட்டது . இந்நிகழ்வில் பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வினை ஏற்படுத்தினர்..