10 இரு சக்கர வாகனங்கள் திடீரென தீயில் எரிந்து நாசம் – என்ன காரணம்..? போலீசார் விசாரணை ..!

கோவைஆர் .எஸ். புரம். மேற்கு அருணாச்சலம் ரோட்டில் உள்ள மேதர் காலனி வசிப்பவர் நாகேந்திரன். இவரது மனைவி கீதா (வயது 30) நேற்று கணவன்- மனைவி இருவரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது வீட்டில் இருந்து திடீரென்று புகை வந்தது. இதை பார்த்த கீதா அவரது கணவரை எழுப்பினார். எழுந்து பார்த்தபோது வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த 1 ஸ்கூட்டர், 4 பைக், 5 சைக்கிள்கள் தீயில் எரிந்து கொண்டிருந்தது.இந்த தீ விபத்தில் நாகேந்திரன், கீதா ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. இவர்கள் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து ஆர் எஸ் புரம் போலீசில் கீதா புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகிறார்கள்..