பைக் விபத்தில் மாணவர் பரிதாப பலி..

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே உள்ள காளியாபுரம,ஈட்டி துறை பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் .இவரது மகன் ஜீவா ( வயது 18 ) மாணவர். இவர் நேற்று அங்குள்ள காளியம்மன் கோவில்- சேத்துமடை ரோட்டில் பைக் ஓட்டிக் கொண்டு சென்றார். அங்குள்ள ஒரு வளைவில் திரும்பும் போது திடீரென்று நிலை தடுமாறி கீழே விழுந்தார் .இவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். வழியிலேயே அவர்  இது குறித்து அவரது தாயார் ஆனைமலை போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..