விஷம் குடித்து 80 வயது மூதாட்டி தற்கொலை

விஷம் குடித்து 80 வயது மூதாட்டி தற்கொலை.. கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள வடக்கலுரை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மனைவி அங்காத்தாள் ( வயது 80) இவர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் வாழ்க்கையில்வெறுப்படைந்து நேற்று சாணி பவுடரை கரைத்துக் குடித்தார். சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.அங்கு சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் இறந்தார். இது குறித்து அன்னூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..