ரெயில் முன் பாய்ந்து கோவை பள்ளிக்கூட ஆசிரியர் தற்கொலை..

ரெயில் முன் பாய்ந்து கோவை பள்ளிக்கூட ஆசிரியர் தற்கொலை.. கோவை :ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்தவர் சாய்குமார் ( வயது 32 )இவர் கோவையில் தங்கியிருந்து தனியார் பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக வேலை பார்த்து வந்தார். இவர் ஆன்லைனில் விளையாட்டில் அதிக அளவு பணத்தை இழந்ததார்.இதனால் சொந்த ஊரில் உள்ள தனது குடும்பத்தினரிடம் தனக்கு பணம் தேவைப்படுகிறது உடனே அனுப்பி வையுங்கள் .இல்லை என்றால்தற்கொலை செய்து கொள்வேன் என்று செல்போனில் மிரட்டி உள்ளார்.இந்த நிலையில் அவர் நேற்று திருப்பூர் அருகே ரெயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.