120 போதை மாத்திரை, கஞ்சாவுடன் வாலிபர் கைது..!

கோவை கரும்புக்கடை சேரன் நகர் பகுதியில் கஞ்சா போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக குனியமுத்தூர் போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்குள்ள ஒரு மறைவான இடத்தில் சந்தேம்படி நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை பிடித்து சோதனை செய்தனர். அவரிடம் 200 கிராம் கஞ்சா 120 போதை மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.அவைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் சுண்ணாம்பு காளவாய் பகுதியைச் சேர்ந்த பைசல் என்ற பைசல் ரகுமான் ( வயது 28) என்பது தெரியவந்தது. இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்..