தமிழக மீனவர்கள் 21 பேரை கைது செய்த இலங்கை படையினர்- 3 படகுகள் பறிமுதல்..!

மிழகத்தை சேர்ந்த 21 மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை..

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் 21 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை 21 பேரை இலங்கை கடற்படையினர் காகேசன் துறை கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.

மேலும், நெடுந்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்த மீனவர்களின் 3 விசைப்படகுகளும் இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. கைதானவர்கள் ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் என முதற்கட்ட விசாரணையில் தகவல் தெரியவந்துள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது.