கருமலை குரூப் தென்னிந்திய தோட்ட அலுவலர் சங்க புதிய நிர்வாகிகளுக்கு அலுவலர்கள் வாழ்த்து…

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள கருமலை குரூப்பில் தென்னிந்திய தோட்ட அலுவலர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது இந்த தேர்வில் புதிய தலைவராக அக்காமலை எஸ்டேட் செக்சன் ஆபிசர் பிரபு, செயலாளராக காஞ்சமலை கள அதிகாரி சிவா இளங்கோமணி இதுபோக ஒவ்வொரு எஸ்டேட் பகுதியிலும் ஒவ்வொரு செயலாளர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் அதன் படி அக்காமலை எஸ்டேட் பகுதிக்கு செயலாளராக கள அதிகாரி அ.செந்திந்தில்குமார், கருமலை எஸ்டேட் பகுதிக்கு செயலாளராக உதவி கள அதிகாரி ராமலிங்கம்,நடுமலை எஸ்டேட் செயலாளராக ஞானசேகர் உதவி கள அதிகாரி, வெள்ளமலை எஸ்டேட்டிற்கு செயலாளராக லட்சுமணன் மருந்தாளுனரும், சங்க ஆலோசகராக அக்காமலை எஸ்டேட் தேயிலை ஆலை அதிகாரி ராஜீவ் ஆகியோர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர் அதைத்தொடர்ந்து நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் நிறுவனத்தை சிறப்பாக செயல்படுத்தி லாப நோக்கொடு கொண்டு செல்ல அதற்கான உரிய பணிகளை துரிதப்படுத்த வேண்டும், அலுவலர்களின் தேவைகளை சம்பந்தப்பட்ட நிர்வாக அதிகாரிகளின் கவனத்திற்கு புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்ற பின்பு முறையாக எடுத்துச்சென்று நிவர்த்தி செய்ய அதற்கான பணிகளை மேற்க் கொள்ளவேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன இந்த புதிய நிர்வாகிகள் தேர்வின் போது சுமார் 50 துக்கும் மேற்பட்ட அலுவலர்கள் கலந்து கொண்ட நிலையில் புதிய நிர்வாகிகளுக்கு அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர்