வனத்துறைஅதிகாரியின் ஜீப்பை உடைத்து கொலை மிரட்டல்.தொழிஅதிபர் கைது….

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த சேத்துமடை மேற்கு பிரிவு பாரஸ்ட் கார்டு சின்ன நாதன் வயது 43 இவர் நேற்று சேர்த்து மடை, அக்பர் அலி தோட்டம் அருகே ரோந்து சுற்றி வந்தார்..அப்போது அந்த பகுதியில் தங்கும் விடுதி நடத்தி வரும் வேட்டைக்காரன் புதூர் ,முதலியார் வீதியைச் சேர்ந்த வி. எஸ் .சோமு என்ற சோமசுந்தரம்  வயது 61குடிபோதையில் நின்று கொண்டிருந்தார் அவரிடம்.வனஅதிகாரி அவரை யானை நடமாட்டம் உள்ளது. இங்கு நிற்க வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்தார்..அப்போது குடிபோதையில் இருந்த சோமசுந்தரம் அவரிடம் தகராறு செய்து, வன அதிகாரியின்ஜீப்பை கல்லால் உடைத்து, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சின்ன நாதன்ஆனைமலை போலீசில புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் குமார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைநடத்தினார் .இது தொடர்பாக சோமு என்ற சோமசுந்தரம் கைது செய்யப்பட்டார் .இவர் மீது அரசு ஊழியரை பணி செய்ய விடாத தடுத்தல், சேதப்படுத்துதல் கொலை மிரட்டல், உட்பட 4 பிரிவுகள் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.