ஆட்டோ மோதி கோவை போலீஸ் ஏட்டு பலியான வழக்கில் டிரைவருக்கு ஓரு ஆண்டு ஜெயில்…

கோவை போத்தனூர் ரயில்வே காவல் நிலையத்தில் போலீஸ் ஏட்டாக பணியாற்றி வந்தவர் காளியப்பன் .அவர் கடந்த 20 14 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 10-ந்தேதி இரவு பணியை முடித்துக் கொண்டு காலை 5 மணி அளவில் தன்னுடன் பணியாற்றி வந்தபெண் போலீஸ் சசிகலா என்பவருடன் போத்தனூர் மெயின் ரோட்டில்மைக்கல் அருகே நடந்து சென்றார் .அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு ஆட்டோ இவர் மீது மோதியது .இதில்போலீஸ் ஏட்டு காளியப்பன் படுகாயம் அடைந்துஇறந்தார்.இது குறித்து கோவை மேற்கு பகுதி போக்குவரத்து புலனாய்வுபோலீசார் ஆட்டோ டிரைவர் ஏசுதாஸ் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை கோவை 8-வது நடுவர் நீதி மன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. நீதிபதி தனலட்சுமி விபத்து ஏற்படுத்தி ஏட்டு காளியப்பன் பலியாக காரணமாக இருந்த ஆட்டோ டிரைவர் ஏசுதாசுக்கு ஒரு ஆண்டு சிறைத் தண்டனையும் ரூ. 8ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.