கோவை டி.கே. மார்க்கெட்டில் புதியபுறக்காவல் நிலையம், போலீஸ் கமிஷனர்பாலகிருஷ்ணன் திறந்து வைத்தார்…

கோவை டவுன்ஹால் பக்கம் உள்ள தியாகிய குமரன் மார்க்கெட்டில் ஏராளமான காய்கறி மற்றும் மளிகை கடைகள் உள்ளது.இங்கு தினமும் ஏராளமானவாகனங்களும்,வியாபாரிகளும் வந்து செல்கிறார்கள். பெரிய கடை வீதி காவல் நிலையத்துக்கு உட்பட்ட இந்த பகுதியில் குற்ற சம்பவங்கள்நடைபெறாமல் தடுக்க ரூ2 லட்சம் செலவில் கழிவறை வசதியுடன் கூடிய புதிய புறக்காவல் நிலையம் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது .இதை போலீஸ் கமிஷனர்பாலகிருஷ்ணன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். மேலும் இங்கு 25க்கு மேற்பட்ட கண்காணிப்புகேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது.இந்தகேமரா காட்சிகளை போலீஸ் கமிஷனர்பாலகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.விழாவில் துணை போலீஸ் கமிஷனர் சண்முகம் உதவி போலீஸ் கமிஷனர், இன்ஸ்பெக்டர்கள் பொதுமக்கள், வியாபாரிகள் பங்கேற்றனர்.