மாடியில் இருந்து தவறி விழுந்து சிறுவன் பலி…

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு உறவினர் வீட்டுக்கு வந்த போது பரிதாபம். கேரள மாநிலம் வயநாடு பகுதியை சேர்ந்தவர் ஜோசப். இவரது மகன் சால்வீன் ஜோசப் ( வயது 15) இவர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காகதுடியலூர் கதிர் நாயக்கன்பாளையத்தில் உள்ள சி.ஆர்.பி.எப். குடியிருப்பில் வசிக்கும்ஜோசப் மனைவியின் அண்ணன் வீட்டுக்கு வந்திருந்தனர். ‘நேற்றுஅங்குள்ள மொட்டை மாடியில் சிறுவர்களுடன் சால்வின்ஜோசப் விளையாடிக் கொண்டிருந்தான்.அப்போது எதிர்பாராத விதமாக தவறிமாடியில் இருந்து கீழே விழுந்தான். இதில்தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் பரிதாபமாக இறந்தான். இது குறித்து தந்தை ஜோசப் துடியலூர் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.