வாகன விபத்தில் 2 முதியவர் சாவு…

மேட்டுப்பாளையம் பக்கம் உள்ள நடூர், அன்னூர் ரோட்டை சேர்ந்தவர் மாணிக்கராஜ் (வயது 72 )இவர் நேற்று அங்குள்ள கோழிக்கடை அருகே நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த ஏதோ ஒரு 4 சக்கர வாகனம் இவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது .இதில் மாணிக்கராஜ் படுகாயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் அவர் இறந்து விட்டார். இதேபோல அன்னூர் பக்கம் உள்ள நாகம்மா புதூர், குன்னதூராம்பாளையத்தை சேர்ந்தவர் துரைசாமி (வயது 80) நேற்று அன்னூர் – அவினாசி ரோட்டில்மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ் இவர் மீது மோதியது .இதில் படுகாயம் அடைந்த துரைசாமி அதே இடத்தில் இறந்தார். இது குறித்து அவரது மகன் கார்த்திகேயன் அன்னூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர்நித்யா சம்பவ இடத்துக்குசென்று விசாரணை நடத்தினார். இது தொடர்பாக திருப்பூர், பூலுவப்பட்டி அறிவொளி நகரை சேர்ந்தசேர்ந்த அரசு பஸ் டிரைவர் ஆண்டவன் (வயது 28) என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.