கோவையில்காவலர்களுக்கான 6 நாட்கள் யோகா பயிற்சி.கமிஷனர் பாலகிருஷ்ணன் இன்று தொடங்கி வைத்தார்…

கோவைமாநகர காவல்துறையும்,கோவை மாவட்ட காவல் துறையும் இணைந்து நடத்தும்.காவலர்களுக்கான 6 நாட்கள் யோகா பயிற்சிகோவை மாநகர ஆயுதப்படை கவாத்து மைதானத்தில் இன்று காலையில் தொடங்கியது.வருகிற 7-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை இந்த யோகா பயிற்சி நடக்கிறது.தினமும் காலை 6:45 மணி முதல் 7 45 மணி வரையோகா பயிற்சி நடக்கிறது.கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பயிற்சியை தொடங்கி வைத்தார்.கோவை மாநகர தெற்கு பகுதி போலீஸ் துணை கமிஷனர்சண்முகம்,,உதவி கமிஷனர் சேகர் கலந்து கொண்டனர்.